தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்ககளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் தீபாவளியன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!