தீபாவளி பண்டிகை – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாடு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தீமை விலகி நன்மையும், இருள் விலகி ஒளி பிறக்கும் பண்டிகை தீபாவளி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த பண்டிகையை மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவோம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம் என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டர் பதிவிட்டது,

தீபாவளி திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தீபத்திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!