பணியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி எல்லையில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை பாதுகாப்பு படையினருடன் கொண்டாட பிரதமர் மோடி இன்று காலை காஷ்மீர் புறப்பட்டு சென்றார். காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷாராவில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாட உள்ளார்.

முன்னதாக பாதுகாப்பு பணியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக நவ்ஷாரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

 

Translate »
error: Content is protected !!