தொடர் மழையின் காரணமாக 2 மரங்கள் விழுந்தன

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நந்தனம் பகுதியில் தொடர்மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்தன.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து ஏழு மணி நேரத்திற்கும் மேல் நீடித்து வருவதால் சென்னை நந்தனம் பகுதிகளில் இரண்டு மரங்கள் காலை 6:40 அளவில் திடீரென முறிந்து விழுந்தது. விடியற்காலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அலுவலகங்களுக்கு பொது மக்கள் செல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!