ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

ஒகேனக்கலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீர்வரத்து  30 ஆயிரம் கன அடியாக நீடித்து வருவதால் சுற்றுலா பயணிகள்  பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வன பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இந்த மழை நீரானது காவிரி ஆற்றில் கலந்து வருவதால்  இரு தினங்களுக்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து, நேற்று 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 30 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. இதனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி மற்றும் ஆற்று பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே விதக்கப்பட்ட தடையை தொடர்ந்து நீட்டித்துள்ளது. இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் வரவும் பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது

Translate »
error: Content is protected !!