மதுரையில் மழை – பூக்களின் விலை கடும் உயர்வு

கடந்த மூன்று நாட்களாக மதுரை மாவட்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் பண்டிகை காலங்களுக்கு  பிறகும் பூக்களின் விலை கடுமையான உயர்வை சந்ததித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்த்துள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, மல்லிகை பூவின் விலை ரூபாய் 1500-க்கும், பிச்சிப்பூவின் ரூபாய் 500-க்கும், முல்லைப் பூவின் விலை ரூபாய் 500-க்கும், அரளிப்பூவின் விலை  ரூபாய் 200- க்கும், ரோஜா பூவின் விலை ரூபாய் 100-க்கும், சம்பங்கியின் விலை ரூபாய் 80 என பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஆகையால் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிர்ந்த்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!