காவிரியில் படகு போக்குவரத்திற்கு தற்காலிக தடை

தமிழகம், ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை க்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் படகு போக்கு வரத்து நடைபெற்று கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் ,மேட்டூர் அணையானது நிரம்ப உள்ளதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வருவாய் துறையினர் மற்றும் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் படகு போக்குவரத்து தற்காலிகமாக தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள்  நெருஞ்சிப்பேட்டையில் இருந்து பூலாம்பட்டிக்கு  சுமார் பத்து  கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையெற்ப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை  படகை இயக்கக் கூடாது என வருவாய்த்துறையினர் கண்டிப்பாக கூறியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!