மதுரையில் தொடர் மழையால் போக்குவரத்து நெரிசல்

தமிழகமெங்கும்  வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொழிந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகர் பகுதிகளான பழங்காநத்தம்,ஜெய்ஹிந்துபுரம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல  வைகை ஆற்றில் பாலம் மூடப்பட்டு ஆற்றின் கரையோர பகுதிகளை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனனர். இதுவரை வைகை ஆற்றில் குளிக்க மற்றும் செல்பி எடுக்க சென்றவர்களில் கடந்த ஐந்து நாட்களுக்குள் 15க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Translate »
error: Content is protected !!