கொள்ளிடம் ஆற்றில் மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு தொடர்ந்து நேற்று மாலை முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளையும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல மீண்டும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.