தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் கமலுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை – அமைச்சர் மா.சு

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த அளவிலான தடுப்பூசி செலுத்துதி கொண்ட நாடுகளில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியம் கூறினார்.

தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், நேற்று அது அதிகரித்துள்ளதால், தடுப்பூசி போட பொதுமக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!