பல மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்த விவசாயிகளின் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று அதை கைவிட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், சில கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாய சங்கங்கள் அறிவித்தன.

குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கெடு விதித்தனர்.

அதை ஏற்று வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து விவசாய சங்கங்களுக்கு அரசு அனுப்பியது. அதை தொடர்ந்து இன்று போராட்டத்தை கைவிடுவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Translate »
error: Content is protected !!