எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதல்வர் வேலை பார்த்து வருகிறார் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

முதல்வர் பொறுப்பில் இருந்து அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதல்வர் வேலை பார்த்து வருகிறார்.

அவரைப் பாராட்டாமவிட்டாலும், அவர் மீது அவதூறு பரப்புவது போன்ற செயல்களைத் தவிர்க்கலாம் என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கூறினார். நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறியதாக சாட்டை துரை முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!