ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 188 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,74,708 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,58,289 ஆக உள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,954 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!