அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்

சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனாவின் பரவலை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் தொடங்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!