வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அனைத்து வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. சத்தியமங்கலம் பவானிசாகர், கடம்பூர், ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
வனச்சரகர், வனக்காவலர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட நான்கு நபர்கள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 600 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் மூன்று நாட்கள் பகுதி நேர கணக்கெடுப்பும், மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. வனவிலங்குகளின் கால்தடம், எச்சங்கள் மற்றும் நேர்காணல் விலங்குகளின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!