சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு- இளைஞர் கைது


விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோட்டக்குப்பம் அடுத்த சோதனைகுப்பம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 9 வயது மகள் சக்தி என்ற இளைஞரிடம் டியூஷன் படிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், சக்தியின் சகோதரன் மணிகண்டன், சிறுமியை வீட்டின் மேல்தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், போலீசார் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Translate »
error: Content is protected !!