கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி வரை போலி நகை வைத்து மோசடி

புதுச்சேரி லாஸ்பேட்டை கூட்டுறவு வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரை போலி நகை 
வைத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி காசாளர் உட்பட இருவரை போலிசார் கைது 
செய்து அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீட்டனர். புதுச்சேரி லாஸ்பேட்டை 
மெயின்ரோட்டில் கூட்டுறவு நகர வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் 1500 க்கும் 
மேற்பட்டோர் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். 
கடந்த 18-ம் தேதி ஆறுமுகம் என்பவர் தனது நகையை மீட்டபோது அவரது நகைக்கு 
பதிலாக வேறு இருந்தததும், அதுவும் போலி நகையாக இருந்ததால் மேலாளரிடம் புகார் 
அளித்தார். இதையடுத்து கூட்டுறவு தலைமை வங்கி அதிகாரிகள் லாஸ்பேட்டை வங்கியில் 
அடமானம் வைத்த நகைகளை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். 
இதில் நகை மோசடி செய்திருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக 80 நகைப்பைகளில் 
நகை மாற்றப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் தலைமை 
காசாளர் கணேசன் உதவியுடன் உதவி காசாளர் நகைகளை மாற்றி வேறு இடங்களில் 
அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. தொடர்ந்து தன்வந்திரி காவல் 
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக 3 கிலோ 280 கிராம் தங்க நகைகளை 
மாற்றி ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது கண்டறியப்பட்டதை 
அடுத்து, தலைமை காசாளர் கணேசன், உதவி காசாளர் விஜயகுமார் ஆகியோரை 
கைது செய்து நகைகளை மீட்டனர். நகைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு 
பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல் ஆய்வாளர் வெங்கடாஜலபதி 
தெரிவித்துள்ளார்
Translate »
error: Content is protected !!