11 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பறிமுதல்


ஆப்ரிக்காவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பு வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆப்ரிக்காவிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், துபாயாலிருந்து இண்டிகோ விமானத்தில் வந்த மும்பை பயணியை சோதனை செய்தபோது, அவர் உள்ளாடைக்குள் மறைத்து பாலிதீன் கவர்களில் பட்டைதீட்டாத வைரகற்களை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 10 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. வைரக்கற்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை நடத்துகின்றனர். இந்த  கற்கள் முறையே தீட்டப்பட்டு பாலீஷ் செய்து, வைரகற்களுக்கான வடிவம் பெற்றால் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!