பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, மும்பையில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகராஷ்டிராவில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புத்தாண்டை முன்னிட்டு, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மும்பை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வார இறுதி விடுமுறை மற்றும் கொண்டாட்டங்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Translate »
error: Content is protected !!