அதிமுக திமுக இடையே வாக்குவாதம்-கைகலப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் பொங்கல் பரிசு வழங்க வந்த எம்.எ.ஏ-வை தடுத்து நிறுத்தியதால் அதிமுக திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அப்போது கூடிய 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் தங்களது மாவட்ட செயலாளரும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் வரும் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட்து.

Translate »
error: Content is protected !!