மகர சங்கராந்தி: புனித நீராட பக்தர்கள் புனித நீராட தடை

கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட ஹரித்வார் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று கங்கையில் புனித நீராடுவதற்கு முற்றிலும் தடை விதித்து மாவட்ட நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக 277 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, ஒமைக்ரான் பாதிப்புபாதித்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!