தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யும், மற்ற மாவட்டங்களிலும் வறண்ட வானிலை காணப்படுகிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!