‘நரகத்தின் வாசலை’ மூட துர்க்மெனிஸ்தான் அரசு முடிவு

மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள அஹல் மாகாணத்தில் உள்ள டார்வெசா என்ற பகுதியில் நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கை எரிவாயு ஆய்வு முயற்சியின் போது, பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி ஒரு பெரிய பள்ளம் உருவானது. அதில், மீத்தேன் வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மீத்தேன் வாயு பரவாமல் தடுக்க 1971 ஆம் ஆண்டு அந்த பள்ளத்தில் தீ வைக்கப்பட்டது. அன்றிலிருந்து தற்போதுவரை பள்ளம் தீப்பற்றி எரிகிறது. அந்த பள்ளத்தில் உள்ள வாயுவால் பல ஆண்டுகளாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. எனவே, பள்ளத்தாக்கிற்கு ‘நரகத்தின் வாயில்’ என்று பெயரிடப்பட்டது.

இந்நிலையில், நரகத்தின் வாசல் எனப்படும் வாயில்களை மூட துர்க்மெனிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 50 ஆண்டுகளாக எரிந்து வரும் தீயினால் அப்பகுதியில் இயற்கை எரிவாயு குறைந்து வருவதாகவும், இயற்கை எரிவாயு வீணாவதை தடுக்கவும், அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லவும் அரசு முயற்சித்து வருவதாக துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்மென்குலி பெர்முர்மெடெவ் தெரிவித்துள்ளார்.

நரகத்தின் வாசல் எனப்படும் பள்ளத்தை மூட துர்க்மெனிஸ்தான் முடிவு செய்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!