பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஊத்தங்கரை அருகே பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பெண்கள் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஓலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஒலா நிறுவனத்தில், இரவு பணியை முடித்த பெண் ஊழியர்கள் ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று ஊத்தங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தது. கும்மனூர் வழியே வந்தபோது, நிலைதடுமாறிய பேருந்து, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், படுகாயமடைந்த ஐந்து பெண் ஊழியர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!