எந்த மாவட்டமும் பின் தங்கி விடக்கூடாது – மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா டிஜிட்டல் வடிவில் புரட்சியை சந்தித்து வருகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அரசு சேவைகள் மக்களை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்றடைய வேண்டும்.

எந்த மாவட்டமும் பின் தங்கி விடக்கூடாது; சவாலை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நல்லாட்சி வழங்குவதில் மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் உதவி வருகிறது. கர்நாடகா, இமாச்சல பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!