தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மொழிப்போர் தியாகி அரங்கநாதனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் உயரவில்லை, குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை நோய்த்தொற்றுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், தொற்று தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஊரடங்கு தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!