ரவுடிக்கு வழங்க இருந்த 4 செல்போன்கள், போதை வஸ்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ரவுடிக்கு வழங்கப்பட்ட இருந்த 4 செல்போன்கள், போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் குடியரசு தினவிழாவை யொட்டி அமைக்கப்பட்ட பந்தலை எடுக்க சிறைக்குள் டாடா ஏஸ் மினி வேன் ஒன்று வந்தது. அப்போது அந்த வேனை போலீசார் சோதனையிட்ட போது அதில், மறைத்து வைக்கப்பட்ட 4 மொபைல் போன்கள், 10 பீடி கட்டு, 10 ஹான்ஸ் பாக்கெட் கஞ்சா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஓட்டுநரை கைது செய்து மேற்கொண்ட விசாரணயில், வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி சார்ப் விக்கிக்கு கொடுக்க கொண்டு வந்தது தெரியவந்தது.

 

Translate »
error: Content is protected !!