மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகை ஸ்வேதா திவாரியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்த காவல்துறைக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
நடிகை ஸ்வேதா திவாரி ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘கடவுள் தமது உள்ளாடையை அளவு எடுத்து கொண்டிருக்கிறார்’ என்றார். அவர் பேசிய இந்த வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து 24 மணி நேரத்திற்குள் விசாரணை நடத்தி ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு நரோட்டம் மிஸ்ரா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.