எடியூரப்பாவின் பேத்தி பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலம் பா.ஜ.க தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா (வயது 30) இன்று (வெள்ளிக்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சவுந்தர்யா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மத்திய பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். மருத்துவமனையில் பணிபுரியும் சக மருத்துவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சௌந்தர்யாவுக்கு 6 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில் சவுந்தரியா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யா, எடியூரப்பாவின் பேத்தி ஆவார். சௌந்தர்யா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!