ஆற்றில் குளித்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

திருச்சி அருகே புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க சென்ற 15 வயது சிறுவன்  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான இவர், தனது மனைவி சுகுணா மற்றும் பிள்ளைகளுடன் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலைக்கு சென்றுள்ளார். அவர்கள்  ஆற்று நீரில் குளித்து கொண்டிருந்த நிலையில், கண்ணனின் மகன் சஞ்சய் ஆழமான இடத்தில் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரை கண்ணன் தேடி அலைந்த நிலையில், உயிரிழந்த நிலையில், சிறுவன் சஞ்சய் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்………….

Translate »
error: Content is protected !!