குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பெய்ஜிங் வந்தடைந்தது

சீனாவில் வருகிற நான்காம் தேதி தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியானது தொடர் ஓட்டம் மூலம் சவ்காங் பூங்கா வந்தடைந்ததுள்ளது.

சீன நாட்டின் கூடைப்பந்து அணியின் நட்சத்திர வீரர் Yao Ming ஒலிம்பிக் ஜோதியை அடையாளபூர்வமாக முதலில் பெற்றுக் கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் கிரீஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட இந்த ஒலிம்பிக் ஜோதி பல்வேறு நாடுகளை கடந்து சீன வந்தடைந்துள்ளது. போட்டி துவங்கும் நாளான நான்காம் தேதி அன்று துவக்கவிழாவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஜோதி ஏற்றப்படும் எனவும், கொரோனா காரணமாக குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்த ஜோதி ஏற்றும் நிகழ்வுக்கு அனிமதிக்கப்படுவார்கள் என சீன ஒலிம்பிக் கமிட்டி தெறிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!