மன்னிப்பு கோரினார் நடிகர் சித்தார்த்

பேட்மின்டன் வீராங்கனை மற்றும் தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் குறித்து சர்ச்சைக் கருத்து பதிவிட்ட விவகாரத்தில் தான் மன்னிப்பு கோரியுள்ளதை சுட்டிக்காட்டி போலீசார் விசாரணையின்போது நடிகர் சித்தார்த் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பெண் தொகுப்பாளரின் ட்விட்டர் பதிவுக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது விமர்சனங்கள் எழுந்தது. அதன் பின் தனது ட்விட்டர் பதிவை நீக்கி நடிகர் சித்தார்த் தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியிரிந்தார். எனினும் இவ்விவகாரத்தில் நடிகர் சித்தார்த் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறைக்கு பரிந்துரைத்த நிலையில், சென்னை காவல்துறை சார்பில் நடிகர் சித்தார்த்துக்கு கடந்த 10 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நடிகர் சித்தார்த்திடம் வீடியோ கான்பெரன்சிங் மூலம் சென்னை போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். வாக்குமூலத்தில் நடிகர் சித்தார்த் தான் ஏற்கனவே தனது பதிவை நீக்கி மன்னிப்பு கோரியுள்ளதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கும் தான் மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!