புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 162 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில், 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் 102 பேருக்கும், காரைக்காலில் 36 பேருக்கும், ஏனாமில் 22 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 506 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!