தமிழ்நாடு அரசுப் பேருந்தை பறிமுதல் செய்த ஆந்திர போலீசார்

சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் பயணித்ததாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பேருந்தை ஆந்திர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றை, சந்திரகிரி அருகே ஆந்திர காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பேருந்தில் இருந்த 36 பேர் கீழே இறங்கி, காட்டுப் பகுதிக்குள் ஓடி மறைந்தனர். அவர்கள் செம்மரங்களை வெட்டுவதற்காக திருப்பதி வந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த காவல்துறையினர், பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!