நடிகர் சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என பட்டம்

நடிகர் சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என்ற பட்டம் வழங்குவதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், ஜெய்பீம் போன்ற படத்தில் சூர்யா நடித்ததே துணிவு தான் என்றும், அவருக்கு புரட்சி நாயகன் என பட்டம் கொடுக்கிறேன் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர், பெரியார் கருத்துகளை திரைப்படங்களில் அதிகம் காட்ட வேண்டும் என்றும் சூர்யா ரசிகர்கள் அவரை பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Translate »
error: Content is protected !!