திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கான தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கான தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவருக்கான மறைமுக வாக்குப்பதிவு துவங்கிய போது, தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி வாக்குப்பதிவு மையத்திற்குள் திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மேஜை மீது இருந்த கோப்புகள் அனைத்தும் தூக்கி எறிந்து தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!