நடிகர் சூர்யா வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவதூறாக சித்தரித்து இருப்பதாக எழுந்த சர்ச்சையில் பாமக சார்பில் நடிகர் சூர்யாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் தி.நகரில் உள்ள சூர்யா வீட்டிற்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மன்னிப்பு கோராத வரை கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியிட அனுமதிக்க கூடாது என தீர்மானித்துள்ளனர். இதனையடுத்து நடிகர் சூர்யாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் தி.நகரில் உள்ள சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!