சாக்கடைகளை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்தது.

இந்தநிலையில் தாளவாடி மலைப்பகுதியில் லேசான சாரலுடன் பெயர் துவங்கிய மழை பின்னர் மழையாக மாறியது. இதன் காரணமாக தாளவாடி மலைப்பகுதியில் சாலையோரம்  உள்ள சாக்கடைகள் சரியான முறையில் தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை நீர் சாக்கடையில் நிரம்பி சாக்கடை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் சாலையோரக் கடைகளில் உள்ள உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து சாக்கடைகளை தூர்வாரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடைகளை சரியான முறையில் தூர்வாரி இதுபோன்று மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை நீர் சாலையில் வழிந்து செல்லாதபடி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!