குப்பை கொட்ட வந்த மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

நங்கநல்லூரில் கடன் தொல்லையால் குப்பை கொட்ட வந்த மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ராதா (70), இவர் கடந்த 11ந்தேதி தெருமுனையில் உள்ள தொட்டியில் குப்பையை கொட்டிவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது, பின்னால் நடந்து வந்த நபர் மூதாட்டியில் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கலியை பறித்து கொண்டு தப்பி ஓடினான்.

இது குறித்து பழவந்தாங்கல்  போலீசார் வழக்குபதிவு  சிசிடிவி கேமரா மூலம் சங்கலி பறித்தவனை தேடி வந்தனர். பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது தலைமையிலான போலீசார் நடத்திய  விசாரணையில் மூதாட்டியிடம் சங்கலியை பறித்த நபர் நங்கநல்லூரைச் சேர்ந்த முத்து (41) என்பது தெரியவந்ததுள்ளது.

விசாரனையில் இவர் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் லோடுமேனாக வேலை செய்வதும், மேலும் கடன் தொல்லை மற்றும் குடும்பம் வறுமையில் இருப்பதால் வழிப்பறி செய்ய திட்டுமிட்டு இதனை செய்ததாக போலீசாரிடம் கூறினான்.

இதையடுத்து முத்துவை கைது செய்த போலீசார் அடகு வைத்திருந்த 3 பவுன் நகையை மீட்டனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!