அண்ணன் மனைவிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது

 

சென்னையில் அண்ணன் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், நிர்வாணமாக நின்று ஆபாச செயல்களில் ஈடுபட்ட தம்பியை மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் தனது கணவருடன் வந்து நேற்று முன்தினம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது கணவரின் தம்பி தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும், அன்றைய தினம் தனது முன்பு நிர்வாணமாக நின்று ஆபாச செயல்கள் புரிந்து தன்னை பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச செயல்கள் புரிந்த பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் (39) என்பவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!