கதாநாயகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது

பிரபல தனியார் தொலைக் காட்சியில் துணை நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

சென்னை வளசரவாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவர் நாடகத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண் ஒரு சில நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகின்றார் பிரபல தனியார் தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகி வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒளிப்பதிவாளர் காசிநாதன் கடந்த 11ஆம் தேதி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்பொழுது அந்தப் பெண்ணும் ஒளிப்பதிவாளரும் வீட்டிற்குள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்பொழுது ஒளிப்பதிவாளர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனடியாக அந்த பெண் தன்னுடைய நண்பருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து வந்த நபர் அவரது வீட்டில் இருந்த பெண்ணை மீட்டு வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 


Translate »
error: Content is protected !!