பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தமிழாசிரியர் போக்சோ வழக்கில் கைது

பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பள்ளியின் தாளாளரும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் தனியார் மெட்ரிக் ( காவிரி) பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவருக்கு 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழ் ஆசிரியர் நிலஒளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவியின் வாக்குமூலத்தில் மேலும் பள்ளி தாளாளர் யுவராஜ் என்பவர் கைது.

இவரும் அந்த மாணவி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். புகாரின் அடிப்படையில் குளித்தலை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பள்ளி தாளாளர் யுவராஜை கைது செய்து அழைத்து சென்றனர்.

Translate »
error: Content is protected !!