திரைப்பட தயாரிப்பாளர்களின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் வீட்டில் நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறையின் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான அவரது வீடு, கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, கலைப்புலி தாணு ஆகியோரின் அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்பு செழியனின் தம்பி அழகர்சாமி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நேற்று இரவு 8.30 மணி முதல் தொடங்கியுள்ளனர். மதுரையில் இருந்து அழகர்சாமியின் மகள் வந்து வீட்டை திறந்த பின்பு அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் வருமான வரி கணக்கு முறையாக தாக்கல் செய்யாதது குறித்தும், வரி ஏய்ப்பு செய்ததும் குறித்தும் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தற்போது வரை தகவல் ஏதும் வருமான வரித்துறை சார்பாக வெளியாகவில்லை.

Translate »
error: Content is protected !!