மதுரையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீர் 300க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள டி எம் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கன மழையால் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.

300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் கார் இருசக்கர வாகனங்கள் வீடுகள் நீரில் மூழ்கி பாதிப்பு.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் தவித்து வருகின்றனர்

டி எம் நகர் பகுதியில் புதிதாக பிளாட் அமைப்பதற்காக தனியார் ஒருவர் , பொதுப்பணித்துறை கால்வாயை ஆக்கிரமித்து மாற்றி அமைத்ததால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சம்பந்தப்பட்ட பகுதியில் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!