ரயில்பாதையில் உசிலம்பட்டி ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது

மதுரை –  போடி அகல ரயில்பாதை நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தொடர்ந்து  உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றதுமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமண பொருட்களை பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மதுரை போடி ரயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில்பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் திட்டபணி 2010 ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட சோதனை ஓட்டம் உசிலம்பட்டி வரை நடைபெற்றது.  

 குறிப்பாக உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரு மலைகளை குடைந்து அகல ரயில்பாதை அமைக்கும் பணி உள்ளிட்ட முக்கிய பணிகள் நிறைவடைந்த சூழலில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்டமாக இரயில் இன்சின் சோதனை ஓட்டம் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

 மீண்டும் உசிலம்பட்டிக்கு 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு அகல ரயில்பாதையின் உறுதி தன்மை சோதிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!