சிபிசிஐடிக்கு மாறிய தட்டார்மடம் கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி செல்வன். கடந்த 17ம் தேதி இவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

திசையன்விளை போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சொத்துப்பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேல் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடிவந்த நிலையில்
நேற்று அவர் உள்பட 2 பேர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி நேற்று உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி ஐஜி சங்கர் மேற்பார்வையில் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!