விமான நிலையத்தில் 1.52 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் – 4 பேர் கைது

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானத்தில் வருபவர்கள் கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி வருவது அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது குறிப்பாக கடந்த 7ஆம் தேதி துபாயில் இருந்து வந்த ஆறு பேரிடம் நடத்திய சோதனையில் எட்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சந்தேகப்படும்படியான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது தஞ்சாவூரை சேர்ந்த ரகுமான், பாஷா கள்ளக்குறிச்சியை சேர்ந்த கந்தசாமி, மதுரையை சேர்ந்த நல்லான், காரியாபட்டி சேர்ந்த மணிமாறன்,

அரியலூர் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்ட 7 ஏழு பேர் மறைத்து எடுத்து வந்த ஒரு கோடியே 52 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 28 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பிடிக்கப்பட்ட 7 பயணிகளில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நான்கு பேரை கைது செய்தனர் தொடர்ந்து மற்ற மூன்று பயணிகளை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!