நடிகர் சூர்யா பற்றி பேஸ்புக்கில் அவதுாறு பதிவு: சினிமா டைரக்டர் மீது போலீசில் புகார்

நடிகர் சூர்யா பற்றி பேஸ்புக்கில் அவதுாறாகவும், தரக்குறைவாகவும் பேசி பதிவு போட்ட சினிமா டைரக்டர் மீது அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:– அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைனில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனு விவரம் வருமாறு:–

‘‘நீட் தேர்வு அச்சத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் அது தொடர்பாக நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அது தொடர்பாக சினிமா இயக்குநர் ஆகாஷ் சுதாகர் என்பவர் பேஸ்புக்கில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில் சூர்யா, அவரது தந்தை சிவகுமார், மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா பற்றியும் மிகவும் தரக்குறைவாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ளார். அவர் பேசியதற்கு எந்தவித முகாந்திரமும், ஆதாரமும் இல்லை. ஆகாஷ் சுதாகரின் இந்த பதிவு சமூகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஆகவே சூர்யாவை தரக்குறைவாக விமர்சனம் செய்த இயக்குநர் ஆகாஷ் சுதசாகர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!