மீண்டும் பாலியல் பரபரப்பை கிளப்பியுள்ள நடிகை பாயல் கோஷின் பேட்டி

தமிழ் சினிமாவில் தேரோடும் வீதியிலே படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாயல் கோஷ். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த பிரபல இந்தி டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது மீண்டும் பாயல்கோஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “அனுராக் காஷ்யப் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் 2014-ல் பாம்பே வெல்வெட் படத்தை அவர் இயக்கிய போது நடந்தது. அவரது அலுவலகத்துக்கு பட வாய்ப்பு கேட்டு சென்ற போது என்னையே உற்றுபார்த்தார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிகை என்ற அடையாளம் இல்லாமல் வரும்படி அழைத்தார். நான் சல்வார் கமீஸ் அணிந்து சாதாரண பெண்ணாக சென்றேன். அவர் எனக்கு உணவு பரிமாறி சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறிய கதைகளை சொன்னார். பிறகு மற்றொரு நாளில் மீண்டும் அவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். குடி போதையில் இருந்த அவர் என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று சோபாவில் உட்கார வைத்து என் மீது பாலியல் ரீதியாக பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். நான் விட்டு விடும்படி கெஞ்சினேன். நான் உடன்படவில்லை என்பதை தெரிந்து மனதை மாற்ற முயன்றார். ஒருவழியாக அவரது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். மீண்டும் பலமுறை என்னை அழைத்தார். நான் போகவில்லை.” இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!