5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்களை, நிரந்தர ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 5 லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

Translate »
error: Content is protected !!